Saturday, April 30, 2011

My Extra Sensory Perception experiences

Wiki says the definition of ESP as, "Extra sensory perception involves reception of information not gained through the recognized physical senses but sensed with the mind".Never mind. 
Even during school days I got interested in things related to mind and beyond mind like ESP, Telepathy,Out of body experiences, Astral projection and so on. 
  My first experiment with Telepathy failed miserably though my school buddy was waiting in his home at the planned time to send/receive the signals. I forgot about this experiment and went to sleep. The experiment came back to my sense only when my friend asked about that the next day. "Did you think any thing at 8'o clock yesterday?" "What thinking and why 8'o clock?". We are still friends. 
  During college days, I started feeling I have some extra sense. (No, it is not non sense, as you just thought) One class mate, he had it as a habit to come to my room before the semester practical exams and ask me what experiment he would get. I used to connect the thumb,index and middle fingers and touch the space between the eye brows and say some experiment. (later came to know that space is called Ajna chakra in kundalini yoga) We were in the same batch.The next day, he used to show 'that' experiment and thank me. 
  No, don't assume I write the next year's diary in the current year itself. I didn't develop that sense to that grand manner. 
  Once I predicted the 7 actions that would be performed by a room mate after entering our room, returning from native. He performed those 7 actions perfectly as predicted to the surprise of another room mate who couldn't control his emotions and shouted when all of them came true. The 7 actions are as follows. telling to us "what guys studying,study.. study.",.keeping the suitcase in a particular corner (it was not its usual place), taking the mat from its place and spreading near us, going to the shelf, taking a poems book(sithar paadalgal),sitting on the mat, reading few lines from the book ( the exact lines were read, even to my surprise). 
   On another occasion, bought the Tamil magazine 'vikatan', on way to home from office. At home, took the book to read. Even before opening the book, took a paper and doodled a picture. To my shocking surprise, the page I opened in vikatan had the same picture. Madhan's QA page had a picture of a cave painting which had the same pattern as that of my doodle.  
  Once, I was narrating my ESP experiences in the terrace of a relative, who was listening to that without interest. I could sense that from his facial expressions. I started singing a song sung by Ilayaraja and stopped with first stanza. Suddenly a loud speaker from a near by temple, came live and played the same song. Now my relative's face had shock which he couldn't hide and my face had a cryptic smile. 
  The highlight of these experiences was when I saved myself from the impact of an accident. When I got a job in Chennai, I went to college to resign. I had to return to Chennai that evening. Had a feeling in the afternoon that the bus I would take to Chennai would meet with an accident. It was not a thought, it was a feeling or sense, so strong that I couldn't ignore it.I boarded the bus in Madurai, selected the middle row and aisle seat. Window seat is my passion from child hood. I avoided purposefully on that day. The bus stopped at Ulundurpet. I got down and had tea. 
  The bus started again and going in terrific speed. When I saw the windshield, the speed at  which the trees were going back at the sides of windshield was alarming. I closed my eyes and tried to sleep. Took a look around and found most of the fellow passengers asleep. I couldn't sleep. Started thinking a new film story. The idea was about the meeting of 7 look alike persons from different parts of the world.(Later Dasavatharam had 10 persons) An African,a white man,a sardarji etc. Wanted to have actor Nasser do the role who will suit any getup perfectly. My story building stopped when the bus hit the lorry parked in the left side of the road. Since I was awake, I formed an X with hands and blocked the front seat to avoid myself hitting it. The immediate thought I had was "Ninachenda..." in Tamil which means "I thought...'. I found persons sitting in the front seats, window seats and even last row had wounds because of the impact of the hit. For many years, I was avoiding the bus travel. Preferred to stand in train all the way if seat was not available.

That's all about my ESP experiences. And...I know... right now you are reading this line. :)

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 5

குடியிருப்பு நாய்
ஒவ்வொரு குடியிருப்பிலும்
ஒரு நாய்.
யாரோ ஒரு சிலர்
உணவு வைத்திட்டாலும்
எல்லோருக்கும் நண்பன்.
பெரும்பாலும் தியானத்தில். . .
இரவில் வரும் போது
தியானம் கலைந்து
நிமிர்ந்து பார்க்கும்.
'நம்ம ஆள்' என்று தெரிந்ததும் . . .
மீண்டும் காலுக்குள்
தலை புதைத்து
தியானம் தொடரும்.
அந்த நேரத்தில் . . .
அதன் அடையாளம்
காணும் திறனில்
பிழை நேரக் கூடாதென்று
மனது பதறும்!
*****
குள்ள மனிதன்
உலகின் உயரம்
குறைந்த மனிதன் . . .
செய்தித்தாள் செய்தி.
மேலும் விவரம் தெரிய
இணையத்தில் தேடல்.
படங்கள். . . பேட்டிகள். . .
'நான் தனித்துவம் 
உள்ளவன் என்பது மகிழ்ச்சி!'
உடல் உயரம் இயற்கை.
மனதின் உயரம் நம்பிக்கை!.
நீ மனதளவில்
உலகில் உயர்ந்தவன்!.

*****
சிரித்த முகம்.
கேலியா கிண்டலா
அதே சிரிப்பு!.
வருத்தமில்லா வாழ்க்கை.
தொப்பையில்லா ...
ஊளைச்சதையில்லா ...
சீரான எடை.
ஆடம்பரமில்லாத இருப்பிடம்.
விருப்பு வெறுப்பில்லா...
நட்பு பகை பாகுபாடில்லா...
காதலில்லா... காமமில்லா...
கடமையே கண்ணாய்...
சோம்பலில்லா . . .
ஓய்வில்லா . . .
எத்தனை சிறப்புகள் உனக்கு
பரிசோதனைக்கூட எலும்புக்கூடே!

Sunday, April 24, 2011

சிறு கவிதைகள் தொகுப்பு . . .4

 *****
வருத்தம் தரும்
சிரித்த முகங்கள் . . .
நினைவஞ்சலிச்
சுவரொட்டிகளில் . . .
 *****



விலைக்கு வாங்கப்படும்
பல நாட்குறிப்புகள் 
எழுதப்படுவதில்லை!
எழுதப்படும்
பல நாட்குறிப்புகள் 
விலைக்கு வாங்கியதில்லை!
*****
வீட்டுச் சுவற்றில்
காகம் கரைந்தது.
உறவினர் வந்தனர்.
காகத்தின் உறவினர்.
*****


சுய முகச் சவரத்தின் போது
வெட்டு பற்றிய கவனம்
வெட்டு விழும் வரை.
*****
நண்பனின் மின்னஞ்சல்
தூக்கத்தின் பலன்களைத்
தூக்கிப் பேசிற்று.
நடுநிசி தாண்டிய
நேரத்தில்...
*****





ஆசையாய் வாங்கிய
பூகோள உருண்டை
கீழே விழுந்து
கீறல் ஆகி...
கண்ணாடிக் காகிதத்தால்
ஒட்டப்பட்டிருந்தது. 
கீறல் காணும் போதெல்லாம்...
மனதிலும் கீறல்.
நாமிருக்கும் பெரு உருண்டை
ஞாபகம் வந்தது.
அதன் நலன் பற்றி
அலட்டிக்கொள்ளாதது
அதை நாம்
வாங்கவில்லை என்பதாலா?

Saturday, April 23, 2011

சம்பவங்கள் - ஒரு கிணறும் நான்கு மனிதர்களும் . . .

கல்லூரிப் பணிக்காலத்தின் போது, வளைகுடாப் போரின் காரணத்தாலோ என்னவோ ஒரு வாரம் மின் தடை. கல்லூரியிலும் விடுப்பு விடப்பட்டிருந்தது.
விடுதியில் தங்கியிருந்த எங்களுக்குக் குளிக்க நீரில்லை. இல்லாத ஒன்றை மனம் எப்போதும் நாடும். குளித்தே ஆக வேண்டும் போல் இருந்தது. நானும் மூன்று மாணவர்களும்,விடுதியின் பின்புறம் சற்று தொலைவில் இருந்த கிணற்றில் குளிக்கக் கிளம்பினோம். மதிய நேரம். கரட்டில் நடந்து கிணற்றை அடைந்தோம்.
பாதி ஆழம் அளவு படிகள், படி முடியும் இடத்தில் தண்ணீர். வட்ட வடிவம் பொதுவாகப் பயமுறுத்தாது, நிலா, தோசை இப்படி. வட்டக் கிணறு அந்த வகையில்லை. அதிகமாகச் சினிமா,டிவி பார்ப்பவர்களுக்கு வட்டக்கிணறு பார்த்தவுடன் டொய்ங் ட்ரிங் என்று பயங்கரப் பின்னணி இசை கேட்க ஆரம்பிக்கும்.
     கிணற்றுப் படிக்கட்டுகள் ஒருமாதிரித் தெளிவில்லாமல் மணலில் செய்தது போலிருக்கும்.  நாம் படிகளில் கீழே இறங்கும் போது படிகள் நம்மோடு கீழெ இறங்கி விடுமோ என்று பயமாயிருக்கும். நாம் நடுங்கிய படி இறங்கும் போது மேலே திடீரென்று ஒரு கிராமத்துக் கிழவர் தோன்றி(!) தைரியமூட்டுவார்.அது பயத்தை அதிகப்படுத்தும்.  மூன்று பேர் குளியல் உடைக்கு மாறினோம்.ஒருவன்(ராகேஷ்) மாறவில்லை. ஏன் என்று கேட்டதற்கு தனக்கு நீச்சல் தெரியாதென்று சொன்னான். 'அப்புறம் எதுக்கு வந்த..?' என்று கேட்கவில்லை. அவனை அவன் விரும்பிய இடத்திற்கு அவனே கூட்டிச் செல்வது அவன் உரிமை.
   ஆளுக்கு முதலில் செ.மணி கிணற்றில் குதித்து,நீந்தி(?) நடுக்கிணற்றுக்குப் போய் விட்டான். செ.மணி கொஞ்சம் கனமான ஆள். நானும் இன்னொரு பையனும் கிணற்றில் இறங்கத் தயாரானோம். திடீரென்று செ.மணி 'சார்! சார்!' என்றபடி முங்குவது போல் பாசாங்கு செய்தான். 'இது மாதிரி எத்தன பேரப் பாத்திருக்கோம்.நீந்தி நடுக்கிணத்துக்குப் போனவன் எப்படி முங்குவான்' செ.மணியின் பாவலா வழக்கமான பாவலா நேரக் கட்டுப்பாட்டைத் தாண்டி நீள ஆரம்பித்தது. செ.மணி உண்மையிலேயே மூழ்குகிறானென்று புரிய ஆரம்பித்ததும் வெல வெலக்க ஆரம்பித்தது. நானும் இன்னொரு பையனும் கிணற்றில் குதித்தோம்.
     செ.மணியின் கையைப் பிடித்தேன்.அவன் தன் பலமான கையால் என் தலையை ஒரு அமுக்கு அமுக்கினான். மூழ்குபவர்கள் காப்பாற்றப் போகிறவர்களை அப்படி அமுக்குவார்கள் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தலை தண்ணீருக்கு அடியில் போய்க் கொண்டிருக்கும் போது... செய்தித் தாளில் செய்தி ஒன்று மனதில் ஓடியது. 'கிருஷ்ணன் கோவில் . . .கிணறு. ..உடன் சென்ற ஆசிரியர் பெயர் வெங்கட்ராம்வாசி(23)...'. மீடியா பாதிப்பு தாங்கலடா சாமி! இல்லை. எதுவும் நடக்காது. நடக்க விட மாட்டேன். தெம்போடு தலையை மேலே கொண்டு வந்து செ.மணியை கிண்ற்றின் ஒரத்திற்குத் தள்ளிப் பார்த்தேன். முடியவில்லை. கூட இருந்த பையனும் தள்ளிப் பார்த்தான். அவனாலும் முடியவில்லை. நாங்கள் காப்பாற்றுவதற்குள் செ.மணி அவனாகவே நீச்சல் பழகி விடுவான் போலிருந்தது. என்ன நடக்கும் என்று தெரியாத நேரத்தில்...திடீரென்று நீச்சல் தெரியாதென்று படியில் உட்கார்ந்திருந்த ராகேஷ் மின்னல் வேகத்தில் சட்டை,கைலியைக் கழற்றி விட்டுக் கிணற்றில் பாய்ந்தான் (சொர்க்கடித்தான்). சில நொடிகளுக்குள் செ.மணியைக் கிண்ற்றோரம் தள்ளி விட்டபின் மீண்டும் படியில் போய் உட்கார்ந்து கொண்டான். 'என்னடா நடக்குது இங்க?' செ.மணிக்கு என்னிடமிருந்து பயம் விலகிய கோபத்தில் திட்டுக்கள் கிடைத்தது. 'நீ என்ன பெரிய இவன் மாதிரி குதிச்சு நடுவில போய் சார் சார்ங்கிற'. அடுத்து ராகேஷ் பக்கம் திரும்பினேன். அதை விடக் கோபமாய் 'நீ என்ன நீச்சல் தெரியாதுன்னு சொல்லிட்டு எம்ஜிஆர் மாதிரி டைவ் பண்ற'. அவர்களின் பதில்கள் கீழே.


செ.மணி: 'இதுக்கு முன்னால ஆத்தில நீந்தியிருக்கேன். அந்த தைரியத்தில உள்ள குதிச்சேன்.' (ஆற்றில் நான் கூட கீழே நடந்த படி மேலே நீந்தியிருக்கிறேன். ‘பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை’ பாட்டில் சிவாஜியும்,பாலாஜியும் நீந்துவது போல நடித்திருப்பார்களே! 2 ஆஸ்கார் அதுக்கு அப்பவே வந்திருக்கனும்)
ராகேஷ்: 'நீச்சல் தெரியும். நீந்த போரடிச்சுதுன்னு தெரியாதுன்னு பொய் சொன்னேன்' (Bay Watch பார்க்காத காலத்திலயே ரெஸ்க்யூ எல்லாம் சொந்தமா பழகியிருந்திருக்கான்)
  நன்றி சொல்ல வேண்டிய ராகேஷுடம் கோபப்பட்டது தவறென்று இப்போது தெரிகிறது. 'நன்றி ராகேஷ்!'

   போன வாரம் அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. பேசியது செ.மணி. பெயரை வைத்து யார் என்று தெரிந்து கொண்டபின் நான் சொன்னது ' இல்ல... .இந்தப் பேர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு நீச்சல் வீரர் இருக்காரு'. இருவரும் பலமாகச் சிரித்தோம். செ.மணி இப்போது அவருக்கு நீச்சல் தெரியுமென்றும் இரண்டு வருடங்களுக்கு முன் அவரே ஒருவரைக் காப்பாற்றியதாகவும் சொன்னார்.

Wednesday, April 20, 2011

சம்பவங்கள் - சர்வர் வேலைக்குப் புதுசு/நானா பேசுறேன்/ரீ சைக்ளிங்

சர்வர் வேலைக்குப் புதுசு
  காலை நேரம் அந்த ஹோட்டலில் கூட்டமேயில்லை. எல்லா டேபிளும் காலி.நான் போய் ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் ஒரு பையன் என்னை நோக்கி மெல்ல வந்தான். அவன் என்னை வந்தடையுமுன் லஞ்ச் நேரமே வந்துவிடும் போலிருந்தது. அவன் பார்வையும் தயக்கமும் அவன் சர்வர் வேலைக்குப் புதுசு என்று காட்டின. (நமக்குன்னு வந்து சேர்ராங்களேப்பா) அன்று மாட்டிக் கொண்டு முழிப்பது என் முறை என்று தெரிந்தது.
   ஒரு வழியாக புது சர்வர் என்னிடம் வந்தான். நான் 'பொங்கல் வடை' என்றேன்.  அவன் பயந்தபடி, '......சாப்பிடவா?' என்றான். (என்னைப் பாத்தா இதை வாங்கிக் கொண்டு போய் ப்ளாக்கில விக்கிற மாதிரி தெரியுதா? இதை இங்க சாப்பிடவே ஆளக் காணாம்.)  நான் 'ஆமாம்' என்பது போல் தலையை வைத்து பூம்பூம் மாட்டை இமிடேட் செய்தேன். பொங்கல் வடையை சாப்பிட்டு முடித்தவுடன் வேறெதுவும் சாப்பிட மூடில்லை. புது சர்வர் என்னிடம் மீண்டும் வந்தான். இன்னும் டேபிள்கள் காலி தான். என் டேபிளில் என்னைத் தவிர யாருமில்லை. புது சர்வரிடம் நான் 'காபி' என்றேன்.அடுத்து அவன் கேட்ட கேள்வியில் எழுந்து ஓடி விடலாம் போலிருந்தது. சர்வர் பையன் 'ஒண்ணா?' என்று கேட்டான்.. அந்த சமயம் நான் கொஞ்சம் குண்டாயிருந்தேன்.ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று காபி சாப்பிடும் பழக்கம் இருந்ததில்லை.சாதாரண ஹோட்டலில் வேளைக்கு எடுப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் ஹோட்டல்களில் சாப்பிட்ட முன் அனுபவமாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.ஹோட்டலில் யாராவது சர்வர் பயந்தபடி நடந்து வந்தால் எழுந்து வெளியே ஓடி வந்து விடுவது நல்லது.

நானா பேசுறேன்
அவர் அந்த அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்தார். சென்னையைச் சேர்ந்த அவர் பெயர் நானா. பூர்வீகம் வடநாடு. சேர்ந்த புதிதில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரை இன்டர்காமில் அழைத்திருக்கிறார். மறுமுனையில் இருந்தவர் கொஞ்சம் சீரியசான ஆள். அவர்களின் உரையாடல் இப்படிப் போயிற்று.
'ஹலோ! நான் நானா பேசுறேன்'
'நீங்க நீங்களா பேசுறதுன்னா பேசிக்கோங்க' (இணைப்பு துண்டிக்கப் பட்டது).
பிறகு இவர் மீண்டும் அழைத்து நானா என்பது தன் பெயர் என்று விளக்கியிருக்கிறார்.


ரீ சைக்ளிங் (வருடம் : 90களின் இறுதி)
அலுவலக வண்டியில் காலை நேரம். புதிதாக வண்டியில் பார்த்திருந்த ஒருவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து,'ஒரு ஜோக் சொல்லவா?' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 'அறிமுகம் கூட இல்லாமல் ஜோக் சொல்கிறாரே, நம்ம கோஷ்டி' என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னது,'சைபர் ஸ்பேஸில ஒருத்தரக் கொல்றதுக்கு என்ன பேர்?'. 'தெரியல சொல்லுங்க!'. 'சைபர் ஸ்பேஸுக்கு சை, கொல்றதுக்கு கில்லிங் அதாவது சைக்கிளிங்!' இது ஜோக் என்ற வகையிலோ, கடி என்ற வகையிலோ சேர்த்தியில்லாமல் என்னை எரிச்சலூட்டி... சிறிது காலம் கடி என்ற ஆயுதத்தைத் துறந்திருந்த ஒரு சிவிலியன் அசோகரைப் போருக்கழைப்பது மாதிரி இருந்தது.என்னைக் கடித்த திருப்தியில் அந்தப் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். தோளைத் தொட்டுக் கூப்பிட்டேன். 'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
'சைபர் ஸ்பேஸ்ல ரெண்டு பேரைக் கொல்றதுக்கு என்ன பேர்?'
 'தெரியல'
'பை சைக்கிளிங்'. திரும்பிக் கொண்டார்.
'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
'சைபர் ஸ்பேஸ்ல பைக்ல போறவரைக் கொல்றதுக்கு என்ன பேர்?'
'தெரியல'
' மோட்டார் சைக்கிளிங்'. திரும்பிக் கொண்டார்.
'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
 'சைபர் ஸ்பேஸ்ல ஏற்கனவே கொன்னவரத் திரும்பக் கொல்றதுக்கு என்ன பேர்?' (இந்தக் கேள்வி எனக்கே தாங்கவில்லை.கடிப் போரில் இரக்கத்திற்கு இடமில்லை)
'ரீ சைக்கிளிங்கா?' (அவரே கேட்டார்)
'ஆமாம்'
'சார், போதும் சார்' என்று கும்பிட்டபடி அவர் முதலில் இருந்த சீட்டிற்கே சென்று விட்டார். இந்தக் கதையைக் கேட்டு, அவரை அவர் பிரிவில் 'உனக்கு ஜோக் சொல்ல வேறு ஆள் கிடைக்கலயா?' என்று கேட்டதோடு, ஒரு வாரம் 'யூ காட் ரீ சைக்கிள்ட் பை வாசி' என்று ஓட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன்.

Sunday, April 17, 2011

சம்பவங்கள் - நீண்ட உதவி / டி எம் எஸ் பாட்டு

நீண்ட உதவி
ஒரு நாள் வில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்
எதிரே நடந்து போய்க்கொண்டிருந்த போது, ஒரு ஆள் வேன் ஒன்றைத் தள்ள
உதவிக்குக் கூப்பிட்டார். மேலும்
இரண்டு பேரும் உதவிக்கு வந்தனர்.
தள்ள ஆரம்பித்து முப்பது அடி(!)
தூரம் தள்ளியிருப்போம். வேன்
ஸ்டார்ட் ஆகிற மாதிரி தெரியவில்லை.('வேனில் என்ஜின் இருக்கிறதா?' என்று சந்தேகம் வந்தது!) அதற்கு முன்னர் தள்ளிய வண்டிகள் நான்கு ஐந்து அடிகளுக்குள் ஓடியிருக்கின்றன். நான் தள்ளிக் கொண்டே,பக்கத்தில் தள்ளிக் கொண்டிருந்த, என்னை உதவிக்குக் கூப்பிட்ட ஆளிடம் கேட்டேன்.“ஏங்க சிவகாசி போகனுமா?”
(சிவகாசி பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊர்.) நல்ல வேளையாக வேன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என் கடி பொறுக்காமல்...

டி எம் எஸ் பாட்டு
கல்லூரிப் பணியில் இருந்த போது,
நான் தனியே ஒரு அறையில் தங்கி
யிருந்தேன். ஒரு டிரான்ஸிஸ்டர் தான் பொழுது போக்கு. ஒரு நாள் காலை நேரம் சிலோன் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த பாடல் ”பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றுமொரு விதம்”,
என்று அறிவித்தார் அறிவிப்பாளர். எனக்கு மிகவும் பிடித்த
டி.எம். எஸ்.பாடல் என்பதால், தாவிக்குதித்து டிரான்ஸிஸ்டர் பக்கத்தில் வந்தேன்.பாட்டு ஆரம்பித்தது. 'பறவைகள் பலவிதம்... ஒவ் ஒவ் ஒவ் ஒவ் ஒவ்'.ரெக்கார்டை சரி செய்யுமுன் பல ஒவ்கள் ஓடி விட்டன. கீறல் விழுந்த ரெக்கார்டை வைத்துக்கொண்டு ஒவ் ஒவ்வென்று என் அபிமானப் பாடகரை குலைக்க வைத்து விட்டார்கள். இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. நல்ல வேளை 'பறவைகள் கள் கள் கள் கள்...' என்றோ 'பறவைகள் பலவிதம் தம் தம் தம் தம்...' என்றோ கீறல் விழுந்து கிக் வஸ்துகளுக்கு ஓசி விளம்பரம் செய்யாமல் இருந்தார்கள்.

சம்பவங்கள் - தூசி / சாக்கு (சாடிஸ்டிக் ஜோக்குகள்)

தூசி
என் முன்னாள் கம்பெனியில் உடன் பணி புரிந்த பெண்ணுடன்
பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று
ஐயோ என்று சொல்லிக் கண்ணைக்
கசக்கினார். 'என்னாச்சு!' என்றேன்.
'கண்ணுல ஏதோ விழுந்துருச்சு!'  
என்றார். 'என்ன விழுந்தது?' என்றேன்.
'தெரியலியே சார்!', என்றார். அந்தக் கேள்வி கேட்க சங்கடமாய் இருந்தாலும் நகைச்சுவைக்கான வாய்ப்பை விடாமல் கேட்டேன்
'கண்ணுலதான விழுந்தது!.விழும்போது பார்க்கலயா?';

சாக்கு 
 அலுவலகக் கேன்டீன். மதிய நேரம்.
சாப்பிட்டு விட்டுக் கை கழுவச் சென்ற போது, கை கழுவி விட்டு வெளியே வந்த நண்பர் கீழே போட்டிருந்த ஈரச் சாக்கில் கால் தடுக்கி விழப் போனார். நான் டக்கென்று அவரைப் பிடித்து விட்டேன். அதன் பின் கீழே உள்ள சாக்கினைக் காட்டிக் கொண்டே அவரிடம் சொன்னது, 'இதான் சாக்குன்னு விழப் பாக்கறீங்க பாத்தீங்களா?'

பாடலும் சாயலும் . . .3



'கன்னித் தீவுப் பொண்ணா ' பாடல்,படம் யுத்தம் செய்
   இந்தப் பாடலின் சந்தம் அப்படியே 'தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்' என்ற ரஜினி படப் பாடலை ஒத்திருக்கிறது.

'ஒட்டகத்தக் கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ' பாடல், படம் ஜென்டில்மேன்
சமீபத்தில் இந்தப் பாட்டைக் கேட்ட போது, இது அப்படியே 'சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு' என்ற எவர்கிரீன் பாட்டைப் போலவே இருப்பது தெரிந்தது.மெட்டிலும் பொருத்தம், முக்கியமாக அந்தத் தவில் மேளம்.

'தக தைய தைய தையா தையா' பாடல், படம் உயிரே

சமீபத்தில் இந்தப் பாட்டைக் கேட்ட போது, இது 'பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்' என்ற இளையராஜா பாட்டைப் போல இருப்பது போலிருந்தது. மெல்லத் தொடங்கி வேகம் கூடுவதில் ஒற்றுமை. பிண்ணனி இசையிலும் அங்கங்கே ஒற்றுமை.


'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' பாடல், படம் காதல்
இந்தப் பாடலின் பின் பகுதியில் வந்த இசை கேட்ட மாதிரி இருந்தது. யோசித்தால் இது 'நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா' என்ற  பாடலின் சாயலில் இருப்பது தெரிந்தது.பாதிக்கு மேல் வரும் வயலின் ட்யூனை கிட்டத்தட்ட அப்படியே விட்டுவிட்டார்கள். ராகம் மட்டும் 'நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை' பாடல் அமைந்த ராகத்தில் போட்டிருக்கிறார்கள்.

'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி' பாடல்,படம் ஆடுகளம்
இந்தப் பாடல் அப்படியே மெட்டிலும் தாளத்திலும் 'இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா' பாடலை ஒத்திருக்கிறது.

'நிலா அது வானத்து மேலே' பாடல், படம் நாயகன்
இந்தப் பாடலின் தாளம் அப்படியே 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்' என்ற நவராத்திரி படப்பாடலின் சாயலில் இருப்பது இப்பாடல் வெளிவந்த போதே தெரிந்தது. மெட்டில் கூடப் பொருத்தம் இருக்கும். பாடலின் நடையின் வேகம் கூட்டப் பட்டிருக்கிறது.

Wednesday, April 13, 2011

தேர்தல் கவிதைகள் . . .

தேர்தல்
ஜெயிப்பது யார்
என்று தெரிய
மை வைத்துப்
பார்க்கும் மக்கள்.

*****
 காத்து வாக்கில் போயோ
நேர் வாக்கில் போயோ
குறுக்கு வாக்கில் போயோ
வாக்களியுங்கள்!
குருட்டு வாக்கில்
மட்டும் வேண்டாம்
*****.
வாங்கிய வாக்குகள்
கொடுத்த வாக்குகளை
மறக்கடிக்கக் கூடாது!
*****
நேர்மை
வாய்மை
கடமை
உரிமை
வறுமை
கொடுமை
நன்மை
திறமை
செம்மை
மடமை . . .
போக்க சில மைகள் . . .
ஆக்க சில மைகள் . . .
ஒழிக்க சில மைகள் . . .
பன்மைகள் கலந்த
ஒரு மை இந்த
விரல் மை!
*****
கறை படாத கைகளைத்
தேர்ந்தெடுக்கக்
கறை படலாம் விரல்கள்!
*****
கறை நல்லது!.
சலவைத் தூளுக்கு மட்டுமல்ல. . .
மக்கள் வாழ்க்கைக்கும் தான்!
*****

Wednesday, April 6, 2011

My Music - Own compositions

Funk Fugie - Instrumental
Eureka - Instrumental

Cute Kalyani - Instrumental

Mostly Mohanam - Instrumental

Nee ennaip pirindhaal enna- Instrumental


Without you . . . 
Composed,Played by: Vasi  Singer: Vasi , Recorded: '97 end  Instrument: CASIO 100  http://www.youtube.com/watch?v=wxyL_SxP2zE   

Lyrics:  
I loved you  
I am loving you
I will love you till I die  
Without you... rose is ugly  
Without you... breeze is storm  
Without you... sleeping is just a dream  
Without you... live's like sitting on a knife tip. ******  

Mostly Mohanam Instrumental music Instrument: CASIO 100 Background music: Bossa nova, Instrument used: Cello http://www.youtube.com/watch?v=6pMVoDtwUes   

Film :  Kadhalukku Mariyadhai 


  Song: Ennai thaalaatta varuvaayaa? http://www.youtube.com/watch?v=z53PKKQeV_w ______________________________________________________________________

Anecdote - Achchaji/ Aapka suitcase ji

I like Hindi and still trying to learn it.Didn't have an opportunity to learn Hindi in school. Picked up few words of Hindi from colloquial Tamil(?!). e.g. 'Dhosth', 'Dar' (used a lot in Madurai), 'Bada' (bejaru) and 'kammi'. The Ramayan and Mahabharath serials played in Doordarshan in those days helped in picking up few more words like 'Pithashree', 'Paranthu' and 'Aakraman'


   When we went to Delhi as part of the college 'All India tour',
 I witnessed how the students faced problems due to limited Hindi knowledge. A group of students would ask some shop wala, 'Kithne Rupya?' in pukka pronunciation like that of a Hindi pundit, the shop wala would say some amount in Hindi. The students would look at each other, trying to check whether any one of them had understood and when every face was blank, they would finally tell the shop wala 'Tell in English!" in chorus sounding like Shakespeare. Some students when attempting to buy something, though the shop wala had told elephant's price in Hindi, assumed that the shop wala told cat's price and attempted to bargain it for mouse's price. The net result was they didn't get the product instead they got a punch or shove from the shop wala.

  Immediately after finishing degree, had to go to Mumbai to attend the B.A.R.C interview. To know the bus stop location, I asked somebody for help in my own(!) Hindi.To my surprise that person understood my question and told the way to the bus stop. I stretched my hand and showed the index finger only to deliver "Shukriya!". It sounded like thanking in a threatening way.Was not comfortable with lengthy responses though. The questioning process was continued till somebody used a hand to show the bus stop which was at a distance or told "you are standing in the bus stop!" by pointing to the ground. While going in the bus, wanted to know how much time it would take to reach the B.A.R.C. I used all my Hindi vocabulary to frame a question in Hindi word by word for 5 minutes and finally came up with 'Kithne samay ko B.A.R.C?' and asked my neighbor in the seat. The question was asked in good faith that the short answer would be within the limits of my Hindi vocabulary but it was not.
   My elder neighbor didn't get a clue about my Hindi knowledge, since he wasn't supposedly good in mind reading, started telling a lengthy response which lasted almost 5 minutes. 5 minutes question got 5 minutes answer. I was not understanding any single word of his fluent Hindi. I felt like watching a Bollywood period film without sub titles. Inside I was panicking that he shouldn't know that I didn't know Hindi. To continue my act, every time he paused, I was saying "Achchaji". Internally I was thinking "Boss! please stop, you are wasting (y)our time!." It seemed my neighbor was a chatterbox in Hindi like I was in Tamil. Those two human systems had common natures but didn't have language compatibility in Natural Language Processing.Finally when he finished I prayed god for making him finish his answer, told him "Dhanyawad" with respect and turned to the window side. Never turned to his side till I got down at B.A.R.C

Delhi Tamil nadu express
   Once I was returning to Chennai from Delhi in train. In one station,a large group of uniformed,armed men boarded my compartment. Though that compartment was full, every one of them wanted to find a palm size place to sit. I was in lower berth. Wanting to help the armed men, I told two of them using hand sign to sit, after pulling my legs. That gesture was responded by three big persons and I felt like a man in Win zip. Though I was uncomfortable, wanted to help even two more guys by showing them a place to sit in a funny way. I showed two guys a huge suitcase which could comfortably do the role of a bench for them temporarily. One of them asked with gratitude in his voice, "Aapka suitcase ji?". I hand signed to say no and showed a sleeping old man. Both of them laughed at my silent reply but didn't miss to use that temporary bench.

Tuesday, April 5, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 3



 

சென்னையில் பெய்ததோ 
அடை மழை!
சாலையில் ஓடியதோ 
பெரு நதி!
அதில் போனதோ 
"மிதவைபேருந்து!'


மாநகரக் காவலின் ஊர்தி
உள்ளே கைதிகள் !
போய்க் கொண்டிருந்தது
கைதிகள் மட்டும் அல்ல
அவர்கள் குற்றங்களும் தான்!





பிராணயாமா?
"மூச்சு விடக் கூட நேரமில்லை !"
யோகா?
"உடம்பு வளையாது !"
நடை?
"நடக்கிற காரியமா?"
ஓசியில் கிடைப்பதா 
உடல் நலம்?



  


நிழலின் அருமை
வெயிலில் தெரிந்தால்
பரவாயில்லை!
ஆரோக்கியத்தின் அருமை 
நீரிழிவு வந்தபின் 
தெரிவதை விட!     




  




உன் உடல் 
பேச்சை 
நீ கேட்காவிட்டால்
சீக்கிரம் 
உன் பேச்சை 
உன் உடல் 
கேட்காது

Sunday, April 3, 2011

கவிதைகள் - கறுப்பு வெள்ளை/கரப்பான் பூச்சியும் நானும்

கறுப்பு வெள்ளை 
கலரில் படைக்காமல்
கறுப்பு வெள்ளையில்   
கடவுள் 
உலகைப் படைத்திருந்தால்!
கலர் டிவி இருக்காது
கலர் போட்டோ இருக்காது
கலர் சாக்பீஸ் இருக்காது!
அப்பவும்
நிறவெறி இருக்கும்!

கரப்பான் பூச்சியும் நானும் 




சின்ன வயதில் எனக்குக் 
கரப்பான் பூச்சி கண்டால் 
கொலை நடுக்கம்.
இப்போது பயமில்லை.
என் உருவம் பெரியதாகிவிட்டதாலா!
ஆயினும் கரப்பான் பூச்சிகள்
எப்போதும் போல் 
நடந்து கொள்கின்றன