Saturday, December 3, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு - 21

பின்னோக்கிய பயணம்

தெளிவற்ற பார்வை
வாயில் வழியும் ஜொள்ளு!  
தடுமாறும் நடை...
பார்ப்பவர்க்கு விழும் பயம்.
உளறல் மொழி
அவிழும் உடை
தன்னை அறியாமை...
அன்று குழந்தை.
இன்று 'குடி'மகன்.







பக்கத்தில் தூரமாய்...

பேருந்தில்
முன் பக்கத்து
இருக்கைக்காரரின் சட்டை
கண்ணைப் பறிக்கும்.
சாப்பாட்டுக் கடையில்
பக்கத்து மேஜையின்
சாப்பாடு எச்சில்
ஊற வைக்கும்.
சாலை நிறுத்தத்தில்
பக்கத்து வாகனம்
பிடித்த வண்ணத்தில்
பள பளவென மின்னும்.
பக்கத்தில் இருப்பவர்
மட்டும்
எப்போதும் நிம்மதியாய்
இருப்பதாய்த் தோன்றினால்...
அது உண்மையாகக்
கூட இருக்கும்.

துளித் துளியாய்...

வீட்டுக் குழாயில்
தண்ணீர் சொட்டியது.
வைரம் போன்ற துளிகள்...
கொஞ்சம் கொஞ்சமாய்
வளர்ந்து...பெரிதாகி
மின்னத் தொடங்கிச்
சற்று நேரத்தில்
அமைதியாய் விழும்.
கீழே குழியில் 
தேங்கிய தண்ணீர்
மத்தளமாகி
வசீகரிக்கும் ஓசை
'டுமுல்க்' என்று கிளம்பும்.
சில துளிகளில்
'ஒளியும் ஒலியும்'
ரசித்த நான்
'வயலும் வாழ்வும்'
நினைவுக்கு வரவே
குழாயை மூடினேன்.

2 comments: