Sunday, February 26, 2012

சிறு கவிதைகள் - தொகுப்பு 25 ( படமா பாடமா?/பொம்மை மனிதன்)

 படமா பாடமா?

சூரியன் உதயம்.
மஞ்சள் வெயில்.
நாணும் வானம்.
மின்னும் மேகம்.
அதுவரை கண்டிரா அற்புதம். 
இயற்கையைச் செயற்கையாய்
பதிவு செய்ய
கேமரா எடுத்து
மாடியில் நின்றேன்.
வானத்தைக் கேமராவின்
கண்ணால் பார்த்துப்
பொத்தானை அழுத்தினேன்.
சார்ஜ் குறைவென்று
படமெடுக்க மறுத்தது கேமரா.
மஞ்சள் வெயில் அற்புதத்தை
வெறுங்கண்ணால் பார்த்து விட
வானம் நோக்கினேன்.
மாறி விட்டிருந்தது வானம்.
போய்  விட்டிருந்தது மஞ்சள் வெயில்.
காத்திருக்காது காலம்.
நிலையானதில்லை வெயில் நிறம்.
வாழ்வைப் புரிந்து
வாழத் தொடங்குமுன்
சார்ஜ் குறைந்துவிடும்
மனித வாழ்வில்
இது புதிதில்லை.

பொம்மை மனிதன்

பெருங்கடை.
வாசலில் பெரும்பொம்மை.
டாட்டா காட்டும் பொம்மை .
குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்.
பொம்மையின் கையை
வெட்கச்சிரிப்போடு
குழந்தை தொடும்.
சின்ன பயம் போய்
பெரிய சந்தோசம் பெரும்.

புகைப்படத்திற்குப் போஸ்
கொடுக்கும் பொம்மை.
சிரித்த முகம் பொம்மைக்கு.
மனது சிரிக்கும் பார்ப்பவர்க்கு.
வண்ண உடைப் பொம்மை.
உயரமான குண்டு பொம்மை.

நெடுநேரம் நின்று நடந்து ஆடி
மகிழ வைத்த பொம்மை.
இரவில் உருமாறும் மனிதனாய்.
பசியில் களைத்த
மெலிந்த மனிதன்.
சாதாரண உடை.
வேர்வைப் புழுக்கத்தால்
நச நசத்த உணவைத்
தேடும் உடல்.
உடல் களைத்தாலும்
உள்ளம் களைக்கவில்லை
பிறரை மகிழ வைத்த
காரணத்தால்.

5 comments:

  1. Please Post it in English...

    ReplyDelete
    Replies
    1. Priyesh,

      Pl. check the latest post.

      Rgds,
      Vasi

      Delete
  2. முதல் கவிதை அசத்தல். மனிதன் தன்னை தானே புரிந்துகொள்வதற்குள் .........

    ReplyDelete
  3. நன்றி இந்திரா அவர்களே!

    ReplyDelete
  4. Will post in English Priyesh!

    ReplyDelete