Saturday, February 25, 2012

சிறு கவிதை - பேருந்துப்பாட்டு


இரவு நேரம்
கடற்கரையை ஒட்டிய சாலை
விரையும் பேருந்து
ஜன்னலோர இருக்கை
முகத்தை வருடும் காற்று
பூமியிலும் கொஞ்சம் சொர்க்கம்


பேருந்தில் ஒலித்த
இளையராஜா பாடல்கள்.
சென்னையை நோக்கி நான்.
என்னை நோக்கிப் பாடல்.


காதில் கிச்சு கிச்சு
மூட்டும்
இக்காலப் பாடல்கள்.
இதயத்திற்குச்
சாமரம் வீசும்
ராஜாவின் பாடல்கள்.


எஸ்.பி.பி, எஸ்.ஜானகியின்
காதல் பாட்டு
தாலாட்டானது.
ராஜாவின் கட்டளையால்!.


பாட்டுக் கேட்டுக் கொண்டு
தூங்கினேனா?
தூங்கியபடி
பாட்டுக் கேட்டேனா?
விடை தெரியாமல்
முழித்தேன்!


பேருந்தை விட்டு
இறங்கினேன்.
மனம் பாட்டோடு
பயணம் தொடர்ந்தது.

2 comments: