Thursday, May 5, 2011

பாடலும் சாயலும் . . . 4

'ரங்கு ரங்கம்மா' பாடல், படம் பீமா
இந்தப் பாடல் அப்படியே 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலின் தழுவல். இடையில் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுச் சொல்லப் பஞ்சம் இல்ல' பாடலின் அதிவேகத் தாளத்தைச் சொருகியிருக்கிறார்கள்.

' கேளடி கண்மணி' பாடல்,படம் புதுப்புது அர்த்தங்கள்
இப்பாடல் அப்போது வெளி வந்த இந்திப் படமான தேஜாப் படத்தில் வந்த 'சோ கயா ஏஹ் ஜஹான்' என்ற பாடலைப் போன்று இருந்தது.இருக்கிறது.

'மஞ்சள் வெயில் மாலையிலே' பாடல், படம் வேட்டையாடு விளையாடு
இது 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ' என்ற இளையராஜாவின் பாடலின் தழுவல்.

'நங்கை நிலாவின் தங்கை' பாடல், படம் எங்கேயும் காதல்
இது மைக்கேல் ஜாக்சனின் 'The way you make me feel ' பாடல் போல் அப்படியே உள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்திருக்கலாம்.


No comments:

Post a Comment