Saturday, March 26, 2011

சிறு கவிதைகள் தொகுப்பு 1

****
மீன் பிடிக்கும் 
பிடிக்கப் பிடிக்காது 
****







 


பறவைகளைப் பார்த்தால் சலீம் அலியும்
தொலை பேசியைப் பார்த்தால் கிரகாம் பெல்லும் 
வானொலியைப் பார்த்தால் மார்கோனியும் 
கண்ணாடியைப் பார்க்கும் போது மட்டும் நானும்
என் நினைவுக்கு வருகிறவர்கள்
****


 



வீட்டில் ஒட்டடை அடித்தேன் 
எட்டுக்கால் பூச்சிக்கு 
வீடில்லாமல் போனது!




 



**** 
 பகைவன் இறந்து விட்டான் 
பகை?
****                  

                  ஆனந்தம்                             
தவித்த வாயின் தாகம் தணிவது. . .
அடங்கியிருந்த மூத்திரம் போவது. . .
பசித்த வயிறு நிரம்புவது. . .
அருவிக் குளியல். . .
பழைய நண்பனைக் காணல். . .
தொட்டில் குழந்தையின் தூக்கத்துப் புன்னகை

****
                       

 
                 



உடைந்த கடிகாரம்      
அந்தக் கடிகாரத்திற்கு 
நேரம் சரியில்லை!
****

4 comments:

  1. lovely.. kavidhaiyum sari, adhukku potturukkara picturesum sari.

    ReplyDelete
  2. Shree - Thanks for enjoying the pictures too

    ReplyDelete
  3. Excellent!!! Please send this to Vikatan or any such mass media magazines

    "வீட்டில் ஒட்டடை அடித்தேன்
    எட்டுக்கால் பூச்சிக்கு
    வீடில்லாமல் போனது!"

    ReplyDelete