Tuesday, April 5, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 3



 

சென்னையில் பெய்ததோ 
அடை மழை!
சாலையில் ஓடியதோ 
பெரு நதி!
அதில் போனதோ 
"மிதவைபேருந்து!'


மாநகரக் காவலின் ஊர்தி
உள்ளே கைதிகள் !
போய்க் கொண்டிருந்தது
கைதிகள் மட்டும் அல்ல
அவர்கள் குற்றங்களும் தான்!





பிராணயாமா?
"மூச்சு விடக் கூட நேரமில்லை !"
யோகா?
"உடம்பு வளையாது !"
நடை?
"நடக்கிற காரியமா?"
ஓசியில் கிடைப்பதா 
உடல் நலம்?



  


நிழலின் அருமை
வெயிலில் தெரிந்தால்
பரவாயில்லை!
ஆரோக்கியத்தின் அருமை 
நீரிழிவு வந்தபின் 
தெரிவதை விட!     




  




உன் உடல் 
பேச்சை 
நீ கேட்காவிட்டால்
சீக்கிரம் 
உன் பேச்சை 
உன் உடல் 
கேட்காது

No comments:

Post a Comment