Sunday, April 24, 2011

சிறு கவிதைகள் தொகுப்பு . . .4

 *****
வருத்தம் தரும்
சிரித்த முகங்கள் . . .
நினைவஞ்சலிச்
சுவரொட்டிகளில் . . .
 *****



விலைக்கு வாங்கப்படும்
பல நாட்குறிப்புகள் 
எழுதப்படுவதில்லை!
எழுதப்படும்
பல நாட்குறிப்புகள் 
விலைக்கு வாங்கியதில்லை!
*****
வீட்டுச் சுவற்றில்
காகம் கரைந்தது.
உறவினர் வந்தனர்.
காகத்தின் உறவினர்.
*****


சுய முகச் சவரத்தின் போது
வெட்டு பற்றிய கவனம்
வெட்டு விழும் வரை.
*****
நண்பனின் மின்னஞ்சல்
தூக்கத்தின் பலன்களைத்
தூக்கிப் பேசிற்று.
நடுநிசி தாண்டிய
நேரத்தில்...
*****





ஆசையாய் வாங்கிய
பூகோள உருண்டை
கீழே விழுந்து
கீறல் ஆகி...
கண்ணாடிக் காகிதத்தால்
ஒட்டப்பட்டிருந்தது. 
கீறல் காணும் போதெல்லாம்...
மனதிலும் கீறல்.
நாமிருக்கும் பெரு உருண்டை
ஞாபகம் வந்தது.
அதன் நலன் பற்றி
அலட்டிக்கொள்ளாதது
அதை நாம்
வாங்கவில்லை என்பதாலா?

5 comments:

  1. Good collection.. Written by you or collections ?

    Balachandar L
    1990=94 (Mech)

    ReplyDelete
  2. Thanks,Balachandar. All of my posts are my works.

    ReplyDelete
  3. Dear Vasi,
    All are good punches.
    vbr
    A.Chandrasekar

    ReplyDelete
  4. awesome sir..
    That crow poem fantastic :)
    Dee..

    ReplyDelete