Wednesday, April 13, 2011

தேர்தல் கவிதைகள் . . .

தேர்தல்
ஜெயிப்பது யார்
என்று தெரிய
மை வைத்துப்
பார்க்கும் மக்கள்.

*****
 காத்து வாக்கில் போயோ
நேர் வாக்கில் போயோ
குறுக்கு வாக்கில் போயோ
வாக்களியுங்கள்!
குருட்டு வாக்கில்
மட்டும் வேண்டாம்
*****.
வாங்கிய வாக்குகள்
கொடுத்த வாக்குகளை
மறக்கடிக்கக் கூடாது!
*****
நேர்மை
வாய்மை
கடமை
உரிமை
வறுமை
கொடுமை
நன்மை
திறமை
செம்மை
மடமை . . .
போக்க சில மைகள் . . .
ஆக்க சில மைகள் . . .
ஒழிக்க சில மைகள் . . .
பன்மைகள் கலந்த
ஒரு மை இந்த
விரல் மை!
*****
கறை படாத கைகளைத்
தேர்ந்தெடுக்கக்
கறை படலாம் விரல்கள்!
*****
கறை நல்லது!.
சலவைத் தூளுக்கு மட்டுமல்ல. . .
மக்கள் வாழ்க்கைக்கும் தான்!
*****

1 comment:

  1. வாசி,

    முதல் கவிதையைப் படித்தவுடன் மிக அருமை என்று நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்து வந்த கவிதைகளும் அருமையாய் இருந்தன.



    விரலில் வைத்த மையைப் பற்றி

    எழுதிய உனக்கு இருப்பது திறமை

    அதைப் பார்த்து எனக்குப் பெருமை

    கவித்துவத்தில் உனக்கில்லை வறுமை

    நான் எழுதிய இந்தக் 'கவிதை'யைப் படிக்க

    உங்கள் அனைவருக்கும் வேண்டும் பொறுமை.

    ஸ்ரீகாந்த்.

    ReplyDelete